'மஹிந்தானந்தவையும், துமிந்த திசாநாயக்கவையும் ஒரே சிறை கூண்டில் அடைக்காதீர்கள்.." : அமைச்சர் வெளியிட்ட தகவல்

கொழும்பு வெள்ளவத்தையில் தங்கமுலாம் பூசப்பட்ட டீ 56 ரக துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்தானந்த அளுத்கமகேவையும், துமிந்த திசாநாயக்கவையும் ஒரே சிறை கூண்டில் அடைக்க வேண்டாம் என்று பேஸ்புக்கில் பொதுமக்கள் தமது நிலைப்பாட்டை பதிவேற்றம் செய்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர்,

ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை
கடுமையாக மேற்கொள்ளும் போது மக்கள் ஆனந்தமடைகிறார்கள்.

 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால்
ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் எவரும் சிறை சென்றிருக்கமாட்டார்கள்.

அரச அனுசரணையுடன் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைய செயற்படுகிறோம்.

 குறிப்பாக பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான 94 சந்தேக நபர்கள்
பூஸ்ஸா சிறைச்சாலையில் உள்ளார்கள். போக்குவரத்தின் போது அவதான நிலையில் உள்ள 200 சந்தேக நபர்கள் சிறைகளில் உள்ளார்கள். ஆகவே அவதான நிலையை கருத்திற் கொண்டு தான் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களால் சமூக கட்டமைப்பில் அவதான நிலை ஏற்பட்டுள்ளது. தண்டனைச் சட்டக்கோவைமற்றும் குற்றவியல் சட்டக்கோவையின்
பிரகாரம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது கடினமானதாக உள்ளது.
 
நடைமுறை அவதான நிலையை கருத்திற்கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கான யோசனை அமைச்சரவையில்முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஊடாக உப ஒன்று நியமிக்கப்பட்டு சட்டவரைபு தயாரிக்கப்படும். வெகுவிரைவில் இந்த சட்டம்‘ இயற்றப்படும் என்றார்